1 Books
தன்னம்பிக்கை பேச்சாளர், 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர் என, பன்முகத் தன்மையுடன் பயணிப்பவர். இவர் முதலில் எழுதிய சிறுகதை, கூட்டு குடும்ப சிக்கல்கள், திருமணம் குறித்து, 2003ல், வார இதழ் ஒன்றில், 'மாலினி' என்ற தலைப்பில் வெளியானது.
தொடர்ந்து, தற்போது வரைவார இதழ்கள், நாளிதழ்களில், 60க்கும் மேற்பட்ட நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. தவிர, பதிப்பகம் வழியாக வெளியான, 20க்கும் மேற்பட்ட புத்தகங்களும் அடங்கும். திருநங்கையர் வாழ்க்கை சூழல் பற்றி, இவர் எழுதிய 'காகித பூக்கள்' 2010ல் எழுதி வெளியானது.
தொடர்ந்து, 'உயிரோவியம்' தீப்பெட்டி தொழிலாளர்கள் பற்றிய, 'நெஞ்சம் மறப்பதில்லை, காலநதியில் சித்திர பாவைகள்' தன்னை அறியாமல் ஏமாந்த பெண் பற்றிய, 'காற்றாய் வருவே'ன் என, 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். பல விருதுகளும் பெற்றுள்ளார்.
© 2024 Dharya Information Private Limited