Nandhu Sundhu

1 Books

நந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கல்லூரி நாட்களிலிருந்தே எழுதத் துவங்கியவர். ஏழெட்டு வருடங்கள் எழுதி விட்டு அலுவலக பனிச்சுமைகள் காரணமாக தற்காலிகமாக எழுதுவதை நிறுத்தி விட்டு இப்போது மறுபடியும் எழுத வந்திருக்கிறார்.

நெசவியலில் பி.டெக் பட்டம் பெற்று அரசு நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்ற இவர் தற்போது வசிப்பது சென்னை. வாழ்வியல் கதைகள் எழுதி பல சிறுகதைப் போட்டிகளிலும் பரிசு பெற்றிருந்தாலும் இவரது பலம் நகைச்சுவை தான்.

சம்பவங்களை யாரும் புண்படாத வகையில் விரசமில்லமல் நகைச்சுவையாக விவரிப்பது இவரது பாணி. தமிழில் வந்து கொண்டிருக்கும் அத்தனை பத்திரிகைகளிலும் இவரது படைப்புகள் பிரசுரம் கண்டு கொண்டிருக்கின்றன.

குமுதம் பத்திரிகையில் இவர் எழுதி வரும் மிஸ்டர் எக்ஸ் கதைகள் மிகவும் பிரபலம். பிடித்தது: பயணம். எலெக்ட்ரானிக் உபகரணங்கள். பிடிக்காதது: எதிர்மறை சிந்தனைகள்.

Interviews

All Nandhu Sundhu's Books

View Another Authors