1 Books
இவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரை சேர்ந்தவர். பள்ளியில் பயின்ற காலத்தில் இருந்தே எழுத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். கவிதை, கதை, கட்டுரைகள் என எழுத்தின் பல பரிமாணங்களிலும் செயல்படுபவர்.
சரித்திர நாவல்கள், சமூகச் சிறுகதைகள், க்ரைம் மற்றும் திகில் சிறுகதைகள் மற்றும் நாவல்கள் என எழுதியிருப்பதோடு சிறுவர்களுக்கான பேண்டஸி கதைகளும் எழுதியிருக்கிறார்.
உலகளாவிய இருபது எழுத்தாளர்கள் சேர்ந்து ஒவ்வொருவரும் ஒரு அத்தியாயமாக எழுதிய உறவுகள் ஒரு தொடர்கதை எனும் நாவலில் ஒரு அத்தியாயத்தை தமிழ்நாட்டின் எழுத்தாளராக எழுதியிருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த பதிப்பகத்தின் வாயிலாக வெளியான இந்த நூல் விரைவில் சிங்கள மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட உள்ளது.
இங்கு வெளியாகியிருக்கும் பத்து சிறுகதைகளும் அருவி மாத இதழ், தமிழ்நெஞ்சம் மின்னிதழ், முத்தமிழ் கலசம் மின்னிதழ், பொற்றாமரை மின்னிதழ், சங்கப்பலகை முகநூல் குழு போன்றவற்றில் வெளியானவை என்ற சிறப்பினைப் பெறுகிறது.
© 2024 Dharya Information Private Limited