Mala Madhavan

1 Books

மாலா மாதவன்

மாலா மாதவன் என்ற இவர் தேவகோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்து மதுரையில் எம்.சி.ஏ வை முடித்தவர். திருமணமாகி தற்போது சென்னையில் வசிக்கிறார். பள்ளிப் பருவம் முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

புதுக்கவிதை வெண்பாவாக மாறியது முகநூல் வந்த பிறகு தான் என்கிறார். எளிய சொற்களில் தினம் ஒரு வெண்பா என இவரது கிருஷ்ணாமிர்தம் பக்கம் முகநூலில் வாசிக்கப் பட்டு வருகிறது. முப்பது இன்னிசை வெண்பாக்களால் ஆன பாவை என்ற இவரது நூல் திருப்பாவைப் பாசுரங்களை ஒட்டி அமைந்தது. கதை எழுதுவதில் ஆர்வமுண்டு என்றாலும் அது தூண்டப் படாத திரியாய் இருந்து வந்தது ஒளிர ஆரம்பித்தது சங்கப் பலகை என்ற முகநூல் குழுமம் வந்த பின் தான் என்கிறார்.

இவரது முதல் சிறுகதை வாரமலரில் வெளியானது. குறு நாவல் இரண்டும் நாவல் ஒன்றும் புஸ்தகாவில் வெளியாகி உள்ளது. இவர் எழுதிய ஆலம்பாடி காளி என்னும் பாடல் யூ- டியூபில் பத்தாயிரம் பார்வையாளர்களைக் கடந்து இருக்கிறது.

Interviews

All Mala Madhavan's Books

View Another Authors