Language | Tamil |
---|---|
ISBN-10 | 978-9354902444 |
ISBN-13 | 978-9354902444 |
No of pages | 150 |
Book Publisher | Ukiyoto Publishing |
Published Date | 01 Aug 2021 |
தேன்மொழி ராஜகோபால், படித்தது ஆங்கில இலக்கியம். மரபுகவிதை, புதுக்கவிதை, நவீன மீமொழிக்கவிதைஹைக்கூ என எல்லா வகை கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஆங்கில கவிதைகளும் எழுதி வருகிறார். சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். கோகுலம், மங்கையர்மலர், தினமலர், ஆனந்த விகடன், இனிய உதயம்போன்ற பிரபல இதழ்களிலும்; பதாகை, காணிநிலம ் உள்ளிட்ட
சிற்றிதழ்களிலும். தகவு, நகர்வுகதவு, செந்தூரம் உள்ளிட்ட இலக்கிய இதழ்களிலும் மின்னிதழ்களிலும் படைப்புகள் வெளியாகி உள்ளன. 50 க்கும் மேற்பட்ட கவிதைகள்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
"சிதறும் முத்துகள்” என்ற தன்முனைக் கவிதைகள் தொகுப்பு
மற்றும் "பிராயசித்தம்"என்ற சிறுகதைத்தொகுப்பு அமேசானில் வெளியிட்டுள்ளார். முதல் கவிதைத் தொகுப்பு "சொல் எனும் வெண்புறா” நவீன கவிதைகள் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டு தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சைப் பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது பெற்றுத் தந்துள்ளது.
இரண்டாவது நூல் 'பெண் பறவைகளின் மரம்' (படைப்பு பதிப்பகம்) திரு.ஶ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழியாக்கத்தோடு இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு Gems III ல் இவர் ஆங்கிலக்கவிதை வந்துள்ளது. Golden apples of God என்ற ஆங்கில சிறுகதைத்தொகுப்பிலும் இவர் கதை வந்துள்ளது.
© 2024 Dharya Information Private Limited
மாயமானை உண்மை என நம்பி வலையில் சிக்கிக்கொள்ளும் பெண்ணொருத்தியின் உள்ளத்தில் தகித்துக் கொண்டிருக்கும் தழலை மலர்த்துகிறான் அன்பாலொருவன். பரிசுத்த அன்பில் பூக்கும் தழல் பூக்கள் அதிப்ரகாசமாய் ஒளி வீசும் தானே.